4/2/14

ஆன்டிராய்டு இயங்குதள கைபேசியில் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மென்ஒருங்கு

ஆன்டிராய்டு இயங்குதள கைபேசியில் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மென்ஒருங்கு

 

 

நேயர் நண்பர்களே, வணக்கம். சீன

வானொலி தமிழ் ஒலிபரப்பு, இணையம்
போன்ற சேவைகளை நேயர்கள் எளிதாக
அனுபவிக்க வசதி அளிக்கப்படும்
வகையில், கைபேசிகளில் இயங்கும் "Tamil-
CRI"எனும் மென்ஒருங்கை உருவாக்க
தமிழ்ப் பிரிவு பெரிதும்
முயற்சி எடுத்துள்ளது.
இப்போது,ஆன்டிராய்டு[Android]
கைபேசியில் இயங்கும்
மென்ஒருங்கு வெளியாகியுள்ளது.
அதன் சோதனைப்
பதிப்பு தற்போது வழங்கப்படுகிறது.
அதில், தமிழப் பிரிவின்
ஒலிபரப்பு நிகழ்ச்சிகள், இணைய
செய்திகள் மற்றும் கட்டுரைகள்,
சிறப்புப் பகுதிகள், குறிப்பாக
தற்போது நடைபெறுகிற சீனாவில்
இரு பரும் கூட்டத் தொடர்கள்
இடம்பெறுகின்றன.
கண்டு கேட்டு மகிழுங்கள். இந்த
மென்ஒருங்கு பற்றி உங்கள்
கருத்துக்களையும்
ஆலோசனைகளையும் ஆர்வத்துடன்
எதிர்பார்க்கின்றோம். மிக்க நன்றி!
பயன்பாட்டுக் குறிப்புகள்:
ஒன்று, கைபேசி மூலம் இப்பக்கத்தில்
உலா வந்து, மென்ஒருங்கு பதிவிறக்கம்
செய்ய விரும்பினால்,
இங்கே சொடுக்கவும்,  அல்லது,
கைபேசியில் 'app.cri.com.cn'என்ற
இணையதளத்தில் இந்த
மென்ஒருங்கை பதிவிறக்கம்
செய்யுங்கள்
இரண்டு, தமிழ் எழுத்துக்களை உங்கள்
கைபேசியில் இயல்பாக காணும்
வகையில், ஆன்ராய்டு இயங்குதளத்தின்
பதிப்பு 4.0க்கு மேல் இருக்க வேண்டும்
என்பதை அறிவுறுத்துகின்றோம்.

Labels: , , , , ,

12/22/13

சீன அரசு 2.5 லட்சம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி செய்திகளை வெளியிடுவது எப்படி!!!

சீன அரசு பத்திரிகை தொடர்பாக புதிய விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும், தணிக்கை விதிகளையும் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் தனது நாட்டில் உள்ள அனைத்து வகை ஊடகங்களையும் புதிய விதிமுறையின் கீழ் செயல்பட வைப்பதற்காக அதில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த பணியை சீன அரசின் செய்தி ஊடக துறை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி சீனாவின் இரும்பு திரை நாடு என்ற முத்திரை விலகி மேலும் சுதந்திரமாக எழுதவும், செய்திகளை வெளியிடவும் வாய்ப்பு ஏற்படும் என அந்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

இந்த பயிற்சிக்காக சீன நாட்டில் செயல்படும் முக்கியமான வானொலி, தொலைகாட்சி, பத்திரிகை, இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களை சேர்ந்த 2.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது அவர்கள் அனைவருக்கும் ராணுவ சீருடை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பயிற்சி 2013ம் ஆண்டின் இறுதி வரை நடைபெறும்.

இந்த பயிற்சியில் சீன கலாசாரம், கம்யூனிஸ்ட் பார்வையில் செய்திகளை எவ்வாறு வெளியிடுவது, சமூகவியல் பார்வை, பத்திரிகை தர்மம், சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப செய்திகளை எவ்வாறு தணிக்கை செய்வது, தவறான தகவல்களை மற்றும் அரசுக்கு எதிரான தகவல்களை எவ்வாறு கையாள்வது போன்ற பிரிவுகளின் கீழ் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள் அதன்பிறகு நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவிர பத்திரிகையில் பணிபுரியும் நிர்வாக ஊழியர்களுக்கு தனியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Labels: , , , ,

8/27/13

சீன தமிழ் வானொலியின் ஓர் அறியா தகவல்!!!

சீன வானொலி நிலையம் 1941ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3ம் நாள் ஒலிபரப்பைத் துவங்கியது. துவக்கத்தில் ஜப்பானிய மட்டும் 15 நிமிடத்திற்கு ஒலிபரப்பானது. 60 ஆண்டுகளுக்குப் பின் 38 அந்நிய மொழிகள் சீன மொழி மற்றும் 4 உள்ளூர் மொழிகள் என நாளுக்கு 233 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.
செய்திகள், செய்தித் தொகுப்பு, அரசியல், பொருளாதாரம், பண்பாடு, அறிவியல் தொழில்நுட்பம் முதலியவற்றுடன் தொடர்புடைய சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை வானொலி நிலையத்தின் பல்வேறு மொழிப் பிரிவுகளின்நிகழ்ச்சிக் கட்டனமாகும். நிகழ்ச்சிகள் உலகமெங்கும் ஒலிக்கின்றன. அளவிலும் சரி, செல்வாக்கிலும் சரி, விஓஏ, பி.பி.சி ஆகியவற்றையடுத்து சீன வானொலி நிலையம் உலகில் மூன்றாவது சர்வதேச வானொலி நிலையமாக வளர்ந்துள்ளது. 1984ம் ஆண்டு முதல் உள்நாட்டில் 2 வரிசைகளில் அந்நிய மொழிகள் ஒலிபரப்பலாயின. 91.5 எப்எம், 1251கிஹெர்ட்ஸ் ஏஎம் வரிசையில் ஆங்கில மொழி பெய்சிங் மாநகர் பிரதேசத்திற்கு ஒலிபரப்பாகின்றது. ஆங்கிலம், ஸ்பேனிஷ், அரபு, ஜெர்மன், கொரிய, ஜப்பானிய மற்றும் ரஷிய மொழிகளில் இசைநிகழ்ச்சி ஒலிபரப்பாகின்றது.
40 சீன வானொலி செய்தியாளர் நிலையங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் நிறுவப்பட்டுள்ளன. தவிர, சீனாவின் பல்வேறு மாநிலங்கள் மாநகரங்கள் தன்னாட்சிப் பிரதேசங்கள் ஆகியவற்றிலும் ஹாங்காஹ் மற்றும் மகௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களிலும் செய்தியாளர் நிலையம் அமைந்துள்ளது. இதன் மூலம் மாபெரும் தகவல் வலைப்பின்னல் உருவாகியுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஸவிட்சர்லாந்து, ரஷியா, ஸ்பெனிஷ், கனடா, மாலி,பிரேசில், கியூபா, அமெரிக்கா முதலிய 10க்கும் அதிகமான நாடுகள் பிரதேசங்களின் வானொலி நிலையங்களுடன் நிகழ்ச்சி ஒத்துழைப்புறவை 1987ம் ஆண்டு முதல் சீன வானொலி நிலையம் மேற்கொள்ள துவங்கியது.
ஆண்டுதோறும் சுமார் 200 நாடுகள் பிரதேசங்களில் வாழ்கின்ற நேயர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. வெளிநாட்டு நேயர்கள் விரைவாகவும் வசதியாகவும் பயன் தரும் முறையிலும் சீனாவை அறிந்து கொள்ளும் வழிமுறையாக சீன வானொலி நிலையம் மாறியுள்ளது. 2002ம் ஆண்டில் 11 லட்சத்து70 ஆயிரம் நேயர் கடிதங்கள் சீன வானொலிக்கு வந்து சேர்ந்தன.
1998ம் ஆண்டு டிசெம்பர் திங்களில் சீனா வானொலி நிலையம் தனது இணைய தளத்தைத்துவக்கியுள்ளது. தற்போது சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி, ஜெர்மன், ஜப்பானிய, ரஷிய மொழி, ஸ்பெனிஷ் மொழி, போர்த்துக்கீசிய மொழி உள்ளிட்ட 16 அந்நிய மொழிகளிலும் 17 மொழி இணையக்கிளைகள் இடம் பெறும் பன்னோக்க இணையத் தொகுதி நிறுவப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டில் சீன வானொலி நிலையத்தின் இணைய தளம் அரசின் முக்கிய செய்தி இணையதளமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது முதல் வெளிநாட்டு வானொலிகளின் மூலம் அதன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் ஆற்றலை அதிகரித்துள்ளது. 2003ம் ஆண்டு ஜுலை திங்கள் முதல் ஆங்கிலம், ரிஷிய மொழி,ஜெர்மன், பிரெஞ்சு மொழி, ஸ்பெனிஷ் மொழி உள்ளிட்ட 16 அந்நிய மொழிகள் நாளுக்கு நாள் சுமார் 80 மணி நேரத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா, ஸபெயின் முதலிய நாடுகளின் ஏஎம், எப் எம் அலைவரிசை மூலம் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒலிபரப்புகின்றது.

Labels: , ,