4/13/14

எண்ணியல் காலத்தில், தொழில் நுட்பத்தின் சீர்திருத்தம்

எண்ணியல் காலத்தில், தொழில் நுட்பத்தின் சீர்திருத்தம்

எண்ணியல் காலத்தில், தொழில் நுட்பத்தின் சீர்திருத்தமானது, உலகளவில் ஊடக நிலைமையில் என்னென்ன எந்த மாற்றங்களை ஏற்படுத்தும்? ஊடகத்துறையின் புத்தாக்க வளர்ச்சி, எந்தெந்த வாய்ப்புகளையும் அறைகூவல்களையும் எதிர்நோக்குகின்றது? ஊடகம் எந்த வழிமுறைகளில் புதிய ஆற்றலை உருவாக்கி, மனித நாகரிகத்தின் வளர்ச்சிப் போக்கில் மேலதிக கடமைகளை ஏற்றுக்கொள்ளும்?போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2014ஆம் ஆண்டு கூட்டத்தின் போது நடைபெறும் ஒரு கருத்தரங்காக, சீன வானொலி நிலையமும் போ ஆவ் ஆசிய மன்றமும் கூட்டாக ஏற்பாடு செய்யும் ஊடக தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டம் உலகின் 20 நாடுகளின் ஊடகத் தலைவர்கள் சீனாவின் போ ஆவிற்கு வந்து, எண்ணியல் காலத்தில் ஊடகத்தின் வாய்ப்புகளையும் எதிர்நோக்கும் அறைகூவலை, செய்தி ஊடக புத்தக்கத்தையும் கடமையையும் பற்றி விவாதிப்பார்கள்.

திரு. மாலனின் சிறப்பு பேட்டி
 
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2014ஆம் ஆண்டுக் கூட்டத்தின் முக்கிய கருத்தரங்கான செய்தி ஊடகத் தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டத்தை சீன வானொலி நிலையமும் போ ஆவ் ஆசிய மன்றமும் கூட்டாக நடத்துகின்றன. இக்கூட்டம் ஏப்ரல் 8ஆம் நாள் ஹெநான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் துவங்கியது. பல நாடுகளைச் சேர்ந்த 20க்கு மேலான செய்தி ஊடகங்களின் தலைவர்கள், ஒன்று கூடி, எண்ணியல் காலத்தில், செய்தி ஊடகங்களின் அறைகூவல்களையும் வாய்ப்புகளையும் பற்றி விவாதிப்பர்.
 
Soruce : sarvadesavannoli

Labels: , , ,

12/22/13

சீன அரசு 2.5 லட்சம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி செய்திகளை வெளியிடுவது எப்படி!!!

சீன அரசு பத்திரிகை தொடர்பாக புதிய விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும், தணிக்கை விதிகளையும் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் தனது நாட்டில் உள்ள அனைத்து வகை ஊடகங்களையும் புதிய விதிமுறையின் கீழ் செயல்பட வைப்பதற்காக அதில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த பணியை சீன அரசின் செய்தி ஊடக துறை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி சீனாவின் இரும்பு திரை நாடு என்ற முத்திரை விலகி மேலும் சுதந்திரமாக எழுதவும், செய்திகளை வெளியிடவும் வாய்ப்பு ஏற்படும் என அந்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

இந்த பயிற்சிக்காக சீன நாட்டில் செயல்படும் முக்கியமான வானொலி, தொலைகாட்சி, பத்திரிகை, இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களை சேர்ந்த 2.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது அவர்கள் அனைவருக்கும் ராணுவ சீருடை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பயிற்சி 2013ம் ஆண்டின் இறுதி வரை நடைபெறும்.

இந்த பயிற்சியில் சீன கலாசாரம், கம்யூனிஸ்ட் பார்வையில் செய்திகளை எவ்வாறு வெளியிடுவது, சமூகவியல் பார்வை, பத்திரிகை தர்மம், சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப செய்திகளை எவ்வாறு தணிக்கை செய்வது, தவறான தகவல்களை மற்றும் அரசுக்கு எதிரான தகவல்களை எவ்வாறு கையாள்வது போன்ற பிரிவுகளின் கீழ் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள் அதன்பிறகு நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவிர பத்திரிகையில் பணிபுரியும் நிர்வாக ஊழியர்களுக்கு தனியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Labels: , , , ,