வாழ்த்தலாம் வாங்க.

ஆகஸ்ட் 25 இன்று பிறந்தநாள் காணும் எங்கள் ஆருயிர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் அவரின் ரசிகனாய் & கட்சி உறுப்பினராய் இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். இன்று பிறந்தநாள் காணும் கேப்டன் அவர்களுக்கு அய்யலூர் பேரூராட்சி தேமுதிக கட்சியினர் சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.தற்பொழுது ருபாய் 10ஆயிரம் மதிப்பிலான இனிப்பு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே .பாலசுப்பிரமணி மற்றும் வடமதுரை ஓன்றிய செயலாளர் பழனிவேல் ஆகியோர் இன்று கேப்டன் மதுரை செல்வதால் கலந்துகொள்ள வில்லை என்றாலும். அய்யலூர் பேரூராட்சி நகர செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதி மெ.தர்மலிங்கம், துரைச்சாமி ஆகியோர் தலைமையில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வைத்தனர். பின்பு அனைத்து வார்டுகளிலும் கொடி ஏற்றப்பட்டது.
Labels: வாழ்க கேப்டன் வளர்க தேமுதிக






