8/25/12

வாழ்த்தலாம் வாங்க.


ஆகஸ்ட் 25 இன்று பிறந்தநாள் காணும் எங்கள் ஆருயிர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் அவரின் ரசிகனாய் & கட்சி உறுப்பினராய் இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். இன்று பிறந்தநாள் காணும் கேப்டன் அவர்களுக்கு அய்யலூர் பேரூராட்சி தேமுதிக கட்சியினர் சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.தற்பொழுது ருபாய் 10ஆயிரம் மதிப்பிலான இனிப்பு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே .பாலசுப்பிரமணி மற்றும் வடமதுரை ஓன்றிய செயலாளர் பழனிவேல் ஆகியோர் இன்று கேப்டன் மதுரை செல்வதால் கலந்துகொள்ள வில்லை என்றாலும். அய்யலூர் பேரூராட்சி நகர செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதி மெ.தர்மலிங்கம், துரைச்சாமி ஆகியோர் தலைமையில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வைத்தனர். பின்பு அனைத்து வார்டுகளிலும் கொடி ஏற்றப்பட்டது.
மேலும் வாசிக்க

Labels:

4/12/12

என் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்

என் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும், அனைத்து தமிழன மக்களுக்கு தமிழ்நாடு(india) வாழ் தமிழர்கள் சார்பாகவும் . இத்தள நண்பர்கள் சார்பாகவும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Labels:

3/15/12

SUNNETWORK ALL NEW CHANNELS NOW START

SUN NETWORK ALL NEW CHANNELS NOW START ON SUNDIRECT DTH
CHANNEL LIST:
1) SUN ACTION
2) SURYA ACTION
3) GEMINI ACTION  OTHER CHANNEL COMMING SOON

Labels:

3/13/12

கொலைகார கூட்டங்களின் வெறிச்செயல்

நம் தொப்புல் கொடி உறவுகளுக்கு நேர்ந்த கொடுமைகளை பாருங்கள் உலகமெங்கும் வாழம் தமிழர்களே. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் போரில் இறந்து இருக்கக் கூடும், ஆனால் படுகொலை செய்யப்படவே இல்லை என்று தெரிவித்து உள்ளார் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம்.
இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்று குற்றம் சாட்டி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியால் புதிதாக வெளியிடப்பட்டு உள்ள இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்கிற வீடியோ குறித்து இந்திய ஊடகங்களுக்கு கருத்துக் கூறியபோதே இவ்வாறு கூறி உள்ளார்.
12 வயதுச் சிறுவனான பாலச்சந்திரன் படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார் என்று இவ்வீடியோவில் காண்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பாலச்சந்திரன்இறந்திருக்க கூடும், அதற்கான பதிவுகள் எம்மிடம் இல்லை, ஆனால் அவர் ஒருபோதும் படுகொலை செய்யப்பட்டு இருக்கவில்லை, இப்படுகொலை குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றோம், புலி உறுப்பினர்கள் அடங்கலாக 8000 பேர் இறுதி யுத்தத்தில் இறந்து இருக்கின்றனர், இவர்களில் ஒருவராக பாலச்சந்திரன் இருக்கக் கூடும், சனல் 4 திட்டமிட்ட வகையில் இவ்வீடியோவை ஆக்கி உள்ளது, இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகஇவ்வீடியோவை ஆக்கி உள்ளது, இவ்வீடியோ உண்மைக்கு புறம்பானது, ஏற்றுக் கொள்ள முடியாதது, இவ்வீடியோவை உத்தியோகபூர்வமாக நாம் ஆட்சேபித்து உள்ளோம், சனல் 4 ஊடக ஒழுக்கத்துக்கு புறம்பாக செயல்பட்டு வருகின்றது என்றார். தயவு செய்து இது போன்று நம் மக்களை கொடூமைக்கு ஆளாக்கிய நபர்கள் தண்டிக்கவேண்டும்.

தயவு செய்து தங்கள் கருத்திணை COMMENT பெட்டியில் தெரிவிக்கவும்.

Labels:

12/15/11

முல்லைப் பெரியாறு அணை 142 அடி நீரைத் தேக்க கேரள பாசன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.


முல்லைப் பெரியாறு அணை நீரை 120 அடியாக குறைக்க கேரள சட்டப்பேரவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணையில் 152 அடிக்கு நீரைத் தேக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இந்த அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இன்று சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. பகல் 11 மணிக்கு சபை கூடியதும் மறைந்த அமைச்சர் கருப்பசாமி, எம்.எல்.ஏக்களுக்கு அஞ்சலி செலுத்தி 15 நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் கூடியவுடன் முதல்வர் ஜெயலலிதா முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக சிறப்புத் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

அதில், முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை ஒருபோதும் விட்டுத்தர முடியாது. அணையில் 142 அடி நீரைத் தேக்க கேரள பாசன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். நீர் மட்ட அளவை 152 அடி வரை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு கூறியுள்ளது.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் முப்போகம் விளைய அணை நீரை 152 அடியாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இதற்கு கேரளம் தடையாக இருக்கக் கூடாது, தமிழகத்துக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

அணைப் பகுதியில் பெரும் பீதியும் அச்சமும் நிலவுவதால், அங்கு மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும் என்று சிறப்புத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படவுள்ளது. பின்னர் இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Labels:

12/2/11

TAMILNADU AIRLINE PLANING MADURAI TO SL, MALAYSIYA,SINGAPURE

மதுரை விமான நிலையம் விவாக்கத்திற்கு பிறகு உள்ளுர்களுக்குமட்டுமே இயக்கப்பட்டிருந்த விமான சேவை அடுத்தமாதம் முதல் வெளிநாடுகளுக்கும் இயக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெறும் 40 நிமிடங்களில் இலங்கை சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Labels:

11/10/11

அஷ்வினுக்கு திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வீனுக்கு தனது நீண்ட நாள் கணவுக்கன்னியை மணக்கிறார். இவர்களாது திருமனம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது.

Labels: