முல்லைப் பெரியாறு அணை 142 அடி நீரைத் தேக்க கேரள பாசன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை நீரை 120 அடியாக குறைக்க கேரள சட்டப்பேரவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணையில் 152 அடிக்கு நீரைத் தேக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இன்று சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. பகல் 11 மணிக்கு சபை கூடியதும் மறைந்த அமைச்சர் கருப்பசாமி, எம்.எல்.ஏக்களுக்கு அஞ்சலி செலுத்தி 15 நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்பட்டது.
சபை மீண்டும் கூடியவுடன் முதல்வர் ஜெயலலிதா முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக சிறப்புத் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
அதில், முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை ஒருபோதும் விட்டுத்தர முடியாது. அணையில் 142 அடி நீரைத் தேக்க கேரள பாசன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். நீர் மட்ட அளவை 152 அடி வரை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு கூறியுள்ளது.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் முப்போகம் விளைய அணை நீரை 152 அடியாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இதற்கு கேரளம் தடையாக இருக்கக் கூடாது, தமிழகத்துக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
அணைப் பகுதியில் பெரும் பீதியும் அச்சமும் நிலவுவதால், அங்கு மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும் என்று சிறப்புத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படவுள்ளது. பின்னர் இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
Labels: வாழ்க கேப்டன் வளர்க தேமுதிக


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home