11/9/12

சிட்டி எஃப்.எம் இனி மூன்று மொழிகளிலும் ஒலிபரப்பு!!!

சிட்டி எஃப்.எம்: இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து முற்றிலும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகிவரும் சிட்டி எஃப்.எம் இனி மூன்று மொழிகளிலும் ஒலிபரப்பாக உள்ளதாக அதன் இயக்குனர் ஹட்சன் சமரசிங்கே தெரிவித்துள்ளார். அவ்வப்போது சிங்களத்திலும் ஒலிபரப்பான இந்த வர்த்தக வானொலி,  இனி தமிழிலும் ஒலிபரப்பாவது கண்டு நமக்கெல்லாம் மகிழ்ச்சியே.
இந்த மகிழ்ச்சிக்கு காரணமானவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆவார். அவர் சமீபத்தில் இலங்கை சென்றபோது “நாடு அமைதியாக இருக்க அனைத்து துறைகளிலும் கட்டாயம் மும்மொழிக் கொள்கை அவசியம்” என்று கூறியதன் பயனாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது இலங்கை வானொலி. அப்படியே நமக்கும் கொழும்பு சர்வதேச வானொலியைக் கிடைக்கச் ஏற்பாடுச் செய்திருக்கலாம் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home