1/14/14

தமிழன் டிடிஹச் யின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!


பொங்கல் திருவிழா..

வங்கக் கடல் தமிழன் எங்கு குடி இருப்பினும்
சங்கத் தமிழ் சிறப்பை மறந்து வாழ்வனோ

பொங்கல் திருநாளினை போற்றி மகிழ்ந்திட
தங்க நிறச் சூரியத் தலைவனை முந்தி எழுந்து
பொங்கிடப் புதுப் பானை அலங்கரித்து..

செங்கரும்புப் பந்தல் தொங்க மாவிலை தோரணம் முடிக்க..

மங்களம் நிறைந்த மனையாள் நீராடிப் புது பட்டுடுத்தி
தங்கமக்கள் சிறுமழழை சூழ சேவலும் மயிலும் கூவ
வெங்கலமாய் பொங்கி வரும் கதிரவனை வணங்கி
செங்கீற்று விள்க்கேற்றி கற்பூற சுடரேற்றி விறகடுக்கி
தங்கமென சிவந்த தணலடுபில் வைத்த் புதுப்பானை நீரூற்றி

அங்கமழ பாடுபட்டு உழுவார் நிலம் புலந்த் புத்தரிசி
செங்கமலச் சோலை சேகரித்த தேனோடு பாகும் பருப்பும்
எங்கள் குலமாத பொழிந்த பசும் பாலும் நெய்யுமிட்டு
பொங்கலோ பொங்கல் எனக் குரவியிட்டு வரப்புயர வாழ்வளித்த
மங்காத செல்வம் இயற்கை அண்ணைக்கு நன்றிப் பெருவிழா

சங்க தமிழினதின் பெருவிழா பொங்கல் திருவிழா..

Labels:

12/31/13

தமிழன் டிடிஹச்யின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

 இதயம் ஒரு வெற்று காகிதம்தான்
இதுவரை நிறைவு பெறாத
ஆசைகளும் , கனவுகளும் மட்டுமே
இதில் நிரப்பப்பட்டு இருந்தது இதுநாள் வரை .
அவற்றிற்கும் விடுமுறை கொடுக்கும்
தூரம் அருகில் வந்துவிட்டது . இன்னும்
சில மணி நேரங்கள் மட்டுமே மீதம் உள்ளது . !
கனவுகள் கூட கணக்கத் தொடங்கிவிட்டது
இனியும் போலியாய் உறங்குவதில் என்ன நியாயம்?
இதுநாள் வரை நிழல்களுடன்
நிஜங்களாக வாழ்ந்தது போதும்.
இனியும் நிழலில் நிஜங்களை
இழக்க விருப்பம் இல்லை.!
ஆசைகளை மட்டும் அடுக்கி அடுக்கி
நிறைவேறவில்லையே என்று தினம்
எண்ணி எண்ணி பாதி தாகம் தீர்த்த
அந்த அவல நாட்கள் இனியும் வேண்டாம்.!
கவலைகளை மட்டுமே எண்ணி எண்ணி
இரவுகளில் எல்லாம் விழிகள் தூக்கம் தொலைத்த
அந்த இரவுகளைக் கூட
நான் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை !.
நாளை நாளை என்று தினங்களும்,
வாரங்களும் ,மாதம் கடந்து, இன்று
வருடம் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது.!
துப்பும் எச்சில் கூட
தூரம் சென்று விழவேண்டும்
என்று எண்ணுகிறது மனது.
ஆனால் தோல்விகளை மட்டும்
தோள்களில் சுமக்க எப்படித்தான்
விரும்பியே ஏற்கிறதோ தெரியவில்லை.!
இனி வரும் நாட்களில் முடிவுரைகள் கூட
முற்றுப்புள்ளியின்றிதான ் எழுதப்படும்.
இதுநாள் வரை தோல்விகள் சுமந்த
இந்த தோள்கள் இனி வரும் நாட்களில்
இமயம் தாண்டும் சாதனைகளை சுமக்கும்.!
இதுநாள் வரை உதடு சுழித்து
உதறித் தள்ளிய பணிகள்
எல்லாம் பனித்துளி வசிக்க புதிதாய்
புன்னகையுடன் ஒரு பூந்தோட்டம் அமைக்கும்.
கல்விக்காக மூடியக் கதவுகளை
தட்டி தட்டி முற்றுப்புள்ளி எட்டிய
கனவுகளுக்கு எல்லாம் இனி விடுமுறை.!
இனி வரும் நாட்களில் ஏழைகள்
இமை திறக்கும் திசையெல்லாம்
கல்விக் கூடங்கள் திறந்தே இருக்கும்.!
நாம் சாலை கடக்கும் நேரம் எல்லாம்
பசியால் கையேந்திய ஏழைகளை இனி
பார்ப்பது கூட கடவுளை
பார்ப்பது போல் தோன்றும் நிலை வரும்.!
ஏற்றத் தாழ்வுகள் என்ற வார்த்தைகளே
உலக அகராதியில் இருந்து நீக்கப்படும்.
இனி வரும் நாட்களில் எல்லாம்
எல்லோருக்கும் ஏற்றம்தான் என்ற
புதுமை வார்த்தைகள் ஒவ்வொருவரின்
சுவாசக் காற்றிலும் அச்சிடப்படும் .
இப்படி புதிதாய் பல இலட்சியங்களை
நான் நிரப்பத் தொடங்கிவிட்டேன்
இன்று என் இதயம் ஒரு வெற்று காகிதம்.!
எதிர்காலத்திற்கு என்று எண்ணி எண்ணி
சேர்த்து , நிகழ்காலத்தில் வாழாமல்
வசந்தமின்றியே இறந்துவிட்டது வாழ்க்கை.
இனியும் அறிந்தே இந்த தவறுகள் வேண்டாம்.
நாளை முதல் உங்களின் இதயங்களும்
ஒரு வெற்று காகிதம்தான் .
அதில் நிரப்பத் தொடங்குங்கள்
பல இலட்சிய எண்ணங்களை .
இது நாள் வரை விலை கொடுத்து
வாங்கிய புன்னகை எல்லாம்
இனி உங்களின் இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும்.
நீங்கள் தொலைத்த வெற்றிகள் எல்லாம்
இனி உங்களுக்கு
ஒரு புது முகவரி தேடித் தரும் .
புன்னகையே உங்களுக்காக இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும் பொழுது
புதிதாய் பிறக்கும் இந்த புத்தாண்டு காத்திருக்காதா என்ன .?
நம்பிக்கையுடன் அடியெடுத்து வையுங்கள்
வெற்றி நிச்சயம்.!
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . திண்டுக்கல்லில் மழையோடு புத்தாண்டு துவங்கியது . உங்க ஏரியாவுல எப்படி .

Labels: , , , , ,

8/15/13

தமிழன் டிடிஹச்-யின் சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!

ஆக 15 இன்று இந்தியநாடே தனது சுதந்திர தின விழாவை கொண்டாடி கொண்டிருக்கிறது . இந்த அழகான தறுனத்தில் தமிழன் டிடிஹச்யின் வாசகர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்ன தான் என் நாடு சுதந்திரம் பெற்றாலும் மீன் பிடிக்கும் தமிழனுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தான் வேதணை இதை பற்றி நான் இன்று கூற விரும்பவில்லை விரைவில் எழுத்து சுதந்திரம் உதிக்கவுள்ளது.



எதிர் பாருங்கள் விரைவில் . 

Labels: , , , ,

1/14/13

தமிழன் டிடிஹச்யின் பொங்கல் நல்வாழ்த்துகள்..!

தமிழர் திருநாளாம்
தைப்பொங்கல்
வருகுதடி தோழி...
தமிழனின் புகழை
தரணியெலாம்
பாட வருகுதடி தோழி...
நெற்தங்கத்தை
கொட்டிக் கொடுத்த
தமிழ் மண்ணிற்கும்
கதிரவனின் கருணைக்கும்
எருதின் உழைப்பிற்கும்
நன்றி செலுத்தும் நாளிதடி தோழி...
நாள் முழுக்க
உழுது களைத்த காளை...
மேலும் வாசிக்க

Labels:

12/31/12

இனிய ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

நண்பர்களே எல்லாம் எப்படி இருக்கிங்க? நீண்ட இடைவெளிக்கு பின் உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி . உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். என்னாட ஒரு ஆறு மாசமா மேல விரையில் தமிழன் டிடிஎச்யின் புது வரவு னு ஓடிக்கிட்டே இருக்கு ஆன ஆரம்பிச்ச பாட்டை காணும். என்னாடனு கேட்கலாம் வெய்ட் பன்னுங்கப்பா நம்ம தமிழர் திருநாள் அன்று ஆரம்பம் செய்தரலாம். இந்த 2012 ல என்ன உங்கள் வாழ்க்கையில் சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது. 2013 ல் என்ன நடக்கவேண்டும் எங்களோட பகிர்ந்து கொள்ளுங்கள் . உங்கள் நிகழ்வுகளை காண உலகத்தமிழர்கள் குறைந்தது 1000பேர் காத்துள்ளனர் . ஏனென்றால் இத்தளத்தின் குறைந்த பட்ச வருகையாளர்கள் ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதற்கு காரணம் நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பே ஆகும். இந்த அழகான தருனத்தில் அண்ணன் துரைச்சாமி அவர்களுக்கு எனது மணமார்ந்த நன்றியை தெரிவித்தாக வேண்டும். ஏனென்றால் ஆயிரம் பேர் வருகைக்கு காரணம் முழுக்க அவரையே சாரும். பெஸ்ட்சட்இன்போ மற்றும் தமிழன் டிடிஎச்யின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.நண்பர்களே.

Labels:

11/12/12

தமிழன் டிடிஎச் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அதிகாலை எழுந்ததும்
ஆசை முகத்துடன்
ஓசை நயம் கண்டு
ஒய்யாரமாய் நடைநடந்து
வாசல் வெளியில் சென்று
வண்ண வண்ண
வான வெடிகளை
பார்த்தபடியே
கொஞ்சும் மழலை
முகத்துடன்
முகம் நோக்கின் தாயின்
வாய்மொழியில்
தலைமுதல் பாதம்வரை
தழுவிடும்
மூவண்ண எண்ணையில்
முத்து குளியல் கண்டு
முழுமுதற் கடவுளின்
வரம் பல கொண்டு
புத்தாடை மேனியிலே
புதுபுது ரகத்துடன்
அணிகலன்கள் பூட்டி
அன்னையின் ஆசிர்வாதத்துடன்
இனிப்புகள் உண்டு
வெடிக்கு வெடி சத்தத்தில்
வெள்ளை மனதும்
கொள்ளை கொள்ளும்
இரவில்
மனதில் இருக்கும்
இருட்டை விலக்கி
வெளிச்சம் கொண்டு
வாழ்வதே தீபாவளி திருநாள்
**************************
அசுரன் அழிந்து
ஆனந்தம் கிடைத்ததை போல
நம் வாழ்வில் உள்ள
எல்லா தடை கற்களும்
படிகற்களாக மாறி
துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலர

இந்த தமிழன் டிடிஎச் யின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Labels: