12/20/12

மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட மழை 17 இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர் வீடுகளிலுமாக 34753 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களும் வெள்ளத்தால் மூழ்கியதால் 17 இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர் வீடுகளிலுமாக 34753 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளனர்.


கிட்டத்தட்ட 135464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் இறந்துள்ளனர். ஒருவர் காணாமல் போய் உள்ளார். மட்டக்களப்பில் செங்கலடி, கிரான், ஏறாவூர் ஆகிய பிரதேசங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இம்மக்களுக்கு அவசர உதவி வழங்கும் வகையில் மனிதநேயமிக்க புலம்பெயர் உறவுகள் மற்றும் அவர்களது மனிதநேய அமைப்புக்கள், புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள இந்து ஆலயங்கள், எம்நாட்டில் உள்ள மனிநேய அமைப்புக்கள், இந்து ஆலயங்கள், தர்மசிந்தையாளர்கள் போன்றோர் இயன்ற உதவிகளை வழங்க முன்வருமாறு பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் வாசிக்க

Labels: