விஜய் டிவியில் மார்ச் 15 முதல் புதிய நிகழ்ச்சி ஒல்லி பெல்லி...!!
தமிழ் தொலைக்காட்சி உலகில் நிகழ்ச்சிகளில் தனக்கென ஒரு பாணியை கொண்டுள்ள விஜய் டிவி தற்போது மிகவும் வித்தியசாமான ரியாலிட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது ஒல்லி பெல்லி என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ள இந்த ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி மார்ச் 15ம் தேதி முதல் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது..
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் சந்திக்கும் உடல் பருமன் பிரச்சனையை வைத்து இந்த நிகழ்ச்சி வடிவமைக்கபட்டுள்ளது....
இந்த நிகழ்ச்சியில் சராசரிக்கும் அதிகமான உடல் பருமன் கொண்ட ஆண்களும், பெண்களும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர்.14 போட்டியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கு இடையேயும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதியில் தேர்வாகும் போட்டியாளர்களை, அவர்களது வயதிற்கு, உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை அடையச் செய்வதே நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
நிகழ்ச்சியின் புதுமை என்னவெனில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய தினத்தை யோகா உடன் துவங்க வேண்டும் மேலும் உணவு பழக்கம்,ஜிம்,டான்ஸ்,என அனைத்தும் கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.போட்டியாளர்கள் எப்போது நடுவர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள்.
இந்த நிகழ்ச்சியை மூலம் வீட்டில் இருந்து கொண்டே, உடல் எடையை குறைக்கலாம். மேலும் போட்டியில் பங்கேற்பதன் மூலமாகவும் உடல் எடையை குறைக்கலாம்.
Labels: olli pelli on vijay tv, TV NEWS, vijatv new programm, vijay tv olli pelli, விஜய் டிவியில்



0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home