12/23/13

டிடிஎச் சேவையை மத்திய அரசு தொடக்க வேண்டும் விபூத் பார்த்தசாரதி !!!

மத்திய அரசு மலிவு விலை டிடிஎச் சேவையை தொடங்கி நடத்த வேண்டும் என்று சமூக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் விபூத் பார்த்தசாரதி வலியுறுத்தியுள்ளார் . அவர் கூருகையில் உலகில் நடக்கும் நிகழ்வுகள் உடனுக்குடன் பார்க்கும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால் நாம் விரும்பும் சேனல்களைப் பார்க்கும் வசதி இந்தியாவில் இல்லை. நாம் ஒரு நிறுவனத்தின் டிடிஎச் சேவையை வாங்கினால், அந்த நிறுவனம் வழங்கும் சேனல்களை மட்டுமே பார்க்க முடிகிறது. நாம் விரும்பும் சேனல்களைப் பார்க்க  டிடிஎச்-ஐ கூடுதலாக வாங்க வேண்டும். இதனால் கூடுதலாக செலவழிக்க வேண்டியுள்ளது.
அனைத்து டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனத்துக்கும் பொதுவான செட்டப் பாக்ஸ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மூலம் மலிவு விலையில் டிடிஎச் சேவையைத் தொடங்கி நடத்த வேண்டும். இதில், நாட்டிலுள்ள அனைத்து சேனல்களையும் பார்க்கும் வகையில் நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.
இவை தொடர்பான கண்காட்சி பெங்களூர் டோம்லூரில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது என்றார் பார்த்தசாரதி . இந்த செய்தி தினமணி யில் நேற்று விடப்பட்டது .

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home